×

ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா

ராஜ்கோட்: ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் ரூபாலா மீண்டும் மன்னிப்பு கோரினார். ராஜ்புத்திர ராஜாக்கள் ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்ததாக ருபாலா பேசியிருந்தார்.

ஒன்றிய அமைச்சரும் ராஜ்கோட் தொகுதி பாஜக வேட்பாளருமான ரூபாலா பேச்சுக்கு ராஜ்புத் சமுகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஒன்றிய அமைச்சர் ரூபாலாவின் மன்னிப்பை ராஜ்புத்திர சமூகத்தினர் ஏற்க மறுத்த நிலையில் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.

ராஜ்கோட்டில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரூபாலா, “முன்பு நாட்டை ஆண்ட மகாராஜாக்கள் வௌிநாட்டு ஆட்சியாளர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து நடந்ததாகவும், அவர்களின் பெண்களை திருமணம் செய்து கொடுத்ததாகவும் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் மட்டுமின்றி ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ரூபாலாவுக்கு எதிராக ராஜ்புத்திர சமூகத்தினர் போராட்டம் நடத்தினர்.

The post ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Rupala ,Rajputra ,Rajkot ,Union ,BJP ,Dinakaran ,
× RELATED மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா